Thursday, May 20, 2010

தமிழ் செம்மொழி மாநாடு கீதம் 2010

தமிழ் செம்மொழி மாநாடு கீதம் 2010

பாடல்: பிரப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடல் வரிகள் : கலைஞர்
பாடியவர்கள்: ஏ.ஆர். ரஹ்மான், டி.எம்.எஸ், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.ப்ரகாஷ், ஷ்ருதி ஹாஸன், நரேஷ் ஐயர், சின்மயி, அருனா சாய்ராம், டி.எம்.கிருஷ்னா, நித்யஸ்ரீ மஹாதேவன், பாம்பே ஜெயஸ்ரி, சின்ன பொண்ணு, ப்லேஸ்
இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன் மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!
அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி -
ஓதி வளரும் உயிரான உலக மொழி -
நம் மொழி}நம் மொழி - அதுவே
செம்மொழி}செம்மொழி -நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
- முதல்வர் கருணாநிதி

1 comment: